தமிழ்நாடு

சாக்கடையில் கிடந்த 5 மாத கரு - போலீஸ் தீவிர விசாரணை

கோவையில் ஐந்து மாதங்களே ஆன குழந்தை கரு ஒன்று சாக்கடையில் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

இன்று காலை, கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள சாக்கடையில், முழுவதும் வளர்ச்சிப் பெறாத குழந்தை கரு ஒன்று கிடந்துள்ளது. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த காவல்துறையினர், அந்த கருவை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கருவை பரிசோதித்த மருத்துவர்கள், அது உருவாகி ஐந்து மாதம் ஆகியிருக்கலாம் என்று தெரிவித்தனர்.

சாக்கடையில் அந்த கருவை வீசியது யார் என்பது குறித்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்