Kovai Theft | பணத்தை மட்டும் எடுத்துவிட்டு உண்டியலில் சில்லறை நாணயங்களை விட்டுச்சென்ற மர்ம கும்பல்
கருவலூர் மாரியம்மன் கோயில் உண்டியலை உடைத்து கைவரிசை கோவை சித்தாபுதூரில் உள்ள கருவலூர் மாரியம்மன் கோயிலில், உண்டியலை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் கோயிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், உண்டியலை அருகிலுள்ள காலி இடத்திற்கு தூக்கிச் சென்று உடைத்து, அதிலிருந்த பணத்தை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர். உண்டியலில் இருந்த சில்லறை நாணயங்களையும், கோயிலில் இருந்த வெள்ளிப் பாத்திரங்களையும் தொடாமல் விட்டுச் சென்றுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்