தமிழ்நாடு

தொடர்ந்து குறைந்து வரும் சிறுவாணி அணையின் நீர்மட்டம்

கோவை சிறுவாணி அணையின் நீர் மட்டம் நான்கு அடிக்கும் கீழ் சென்றதால்,10 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும் நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி
கோவை சிறுவாணி அணையின் நீர் மட்டம் நான்கு அடிக்கும் கீழ் சென்றதால்,10 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்ய முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள சிறுவாணி அணையில் இருந்து கோவை மாவட்ட மக்களுக்கு தினமும் 4 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த அணையின் மொத்த கொள்ளளவு 50 அடி என்ற நிலையில் அது தற்போது 4 அடிக்கும் கீழ் சென்றுள்ளது. நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் 10 நாட்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படும் சூழல் உருவாகி உள்ளது. இதற்கு பருவமழை தான் தீர்வாக இருக்க முடியும் என கூறும் அதிகாரிகள், தென்மேற்கு பருவமழையை எதிர்பார்த்து உள்ளதாக தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை