தமிழ்நாடு

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : மீண்டும் விசாரிக்க கோரி சிறுமியின் தாய் மனு

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி அவரது தாயார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளளார்.

தந்தி டிவி

கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி , கடந்த மார்ச் 25-ஆம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது காணாமல் போனார். பின்னர் சிறுமியின் உடல் வீட்டின் பின்புறம் சடலமாக மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் சிறுமி பல முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தி கோரி சிறுமியின் தாயார் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், சிறுமியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்தது தடவியல் துறை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்