தமிழ்நாடு

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : மீண்டும் விசாரிக்க கோரி சிறுமியின் தாய் மனு

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி அவரது தாயார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளளார்.

தந்தி டிவி

கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி , கடந்த மார்ச் 25-ஆம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது காணாமல் போனார். பின்னர் சிறுமியின் உடல் வீட்டின் பின்புறம் சடலமாக மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் சிறுமி பல முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தி கோரி சிறுமியின் தாயார் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், சிறுமியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்தது தடவியல் துறை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?