தமிழ்நாடு

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : மீண்டும் விசாரிக்க கோரி சிறுமியின் தாய் மனு

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கை மீண்டும் விசாரிக்க கோரி அவரது தாயார் கோவை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளளார்.

தந்தி டிவி

கோவை துடியலூரை அடுத்த பன்னிமடை பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி , கடந்த மார்ச் 25-ஆம் தேதி வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது காணாமல் போனார். பின்னர் சிறுமியின் உடல் வீட்டின் பின்புறம் சடலமாக மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் சிறுமி பல முறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தி கோரி சிறுமியின் தாயார் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவில், சிறுமியை இருவர் பாலியல் வன்கொடுமை செய்தது தடவியல் துறை அறிக்கையில் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"