தமிழ்நாடு

அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை : குடும்பத்தினருக்கும் விஷம் கொடுத்து கொன்ற கொடூரம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் அந்தோணி ஆரோக்கியதாஸ் என்பவர் தமது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் கூலிபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் அந்தோணி ஆரோக்கியதாஸ். இவர் கடந்த சில தினங்களாக கடும் முதுகு தண்டுவட வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த அந்தோணி, தமது குடும்பத்தினரை விட்டு பிரிய மனமில்லாமல் மனைவி ஷோபனா, தாய் புவனேஸ்வரி, மற்றும் இரு குழந்தைகள் ரித்திக், ரியா ஆகியோருக்கு விஷம் கொடுத்து கொன்றுள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தோணி இறப்பதற்கு முன், எழுதியிருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் 5 பேர் உயிரிழந்தது அப்பகுதிவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்