தமிழ்நாடு

அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை : குடும்பத்தினருக்கும் விஷம் கொடுத்து கொன்ற கொடூரம்

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் அரசு பள்ளி ஆசிரியர் அந்தோணி ஆரோக்கியதாஸ் என்பவர் தமது குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
திருப்பூர் மாவட்டம் கூலிபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார் அந்தோணி ஆரோக்கியதாஸ். இவர் கடந்த சில தினங்களாக கடும் முதுகு தண்டுவட வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையடைந்த அந்தோணி, தமது குடும்பத்தினரை விட்டு பிரிய மனமில்லாமல் மனைவி ஷோபனா, தாய் புவனேஸ்வரி, மற்றும் இரு குழந்தைகள் ரித்திக், ரியா ஆகியோருக்கு விஷம் கொடுத்து கொன்றுள்ளார். பின்னர் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்தோணி இறப்பதற்கு முன், எழுதியிருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். ஒரே குடும்பத்தை சேர்ந்தவர் 5 பேர் உயிரிழந்தது அப்பகுதிவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்