2003-ல் பெற்றோருடன் ஏற்பட்ட சிறிய கோபத்தில், பிரகாஷ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அதன்பிறகு அவரைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்காததால், குடும்பத்தினர் 23 ஆண்டுகளாக தேடி வந்தனர். இதையடுத்து, கடந்த ஜூலை 1ம் தேதி, பிரகாஷ் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் இருப்பதாக செய்தியாளர் முத்தையா, அவரது தாய் சுந்தரியிடம் தெரிவித்தார். பின்னர் பிரகாஷை அழைத்துவர உறவினர்கள் பஞ்சாப் சென்றபோதும், உரிய ஆவணங்கள் இல்லாததால் காப்பகம் அவரை ஒப்படைக்க மறுத்தது. எனவே தாயார் சுந்தரி கோவை ஆட்சியரிடம் இது தொடர்பாக மனு அளித்தார். தொடர்ந்து அம்மாநில அதிகாரிகள் மற்றும் சண்டிகர் தமிழ் சங்கம் உதவியுடன், உரிய ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு பிரகாஷ் அவரது தாய் சுந்தரியிடம் ஒப்படைக்கப்பட்டார். பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இரும்புச் சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டு, ஒருவேளை உணவு மட்டுமே உண்டு, பின்னர் காப்பக ஆட்களால் மீட்கப்பட்ட பிரகாஷ், பல்வேறு தடைகள் தாண்டி 23 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது தாய் சுந்தரியை சந்தித்த தருணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.