தமிழ்நாடு

அடகு கடையில் 800 சவரன் நகை கொள்ளை

கோவையில் உள்ள அடகுகடை ஒன்றில், பெண் ஊழியர்களை தாக்கி 800 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

கோவை ராமநாதபுரம் பகுதியில், பிரபல தனியார் அடகுக்கடை இயங்கி வருகிறது.நேற்று மாலை இந்த கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த 2 பெண் ஊழியர்களை தாக்கி, நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார். முகமூடி அணிந்த படி வந்த அந்த நபர், கடைக்குள் நுழைந்ததும் அங்கிருந்த பெண் ஊழியர்களில் ஒருவரை பயங்கரமாக தாக்கி உள்ளார்.மற்றொரு பெண் ஊழியர் மீது மயக்க ஸ்பிரே அடித்த அவர், லாக்கரில் இருந்து 800 சவரன் நகை மற்றும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தினர். மேலும், கொள்ளையனை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.கடைக்குள் நுழைந்த அந்த நபர் , அரை மணி நேரத்திற்குள், இந்த கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தி உள்ளதால், முன்னாள் ஊழியராக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.இதுதொடர்பாக பெண் ஊழியர்களிடமும், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை போன அடகு கடையில் பாதுகாவலர் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை