கோவை வனக்கோட்டத்திற்குட்பட்ட சிறுமுகை அடர்ந்த வனப்பகுதியில் கடந்த 28ஆம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, எட்டு வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு எழுந்து நடக்க முடியாத நிலையில் படுத்து கிடந்தது. இதையடுத்து, கடந்த 5 நாட்களாக அந்த யானைக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அந்த யானை உயிரிழந்தது.