தமிழ்நாடு

கோவையில் சிறுவன் சிறுமி வன்கொடுமை கொலை வழக்கு : குற்றவாளி மனோகரனுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற தடை

கோவையில் குழந்தைகளை கடத்தி கொன்ற மனோகரனை தூக்கிலிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தந்தி டிவி

கோவையில்10 வயது சிறுமி முஸ்தான் மற்றும் 7 வயது சிறுவன் ரித்திக் ஆகியோரை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மனோகரனுக்கு கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்த நிலையில் டிசம்பர் 2ஆம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்றுமாறு, கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனோகரன் மனுத் தாக்கல் செய்தார். அதில் ஆளுநருக்கு கருணை மனு அனுப்ப அவகாசம் வழங்காமல் தூக்கு தண்டனை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளதாக கூறப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் டீக்காராமன் ஆகியோர் அமர்வு மனோகரனை தூக்கிலிடும் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை