தமிழ்நாடு

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - சந்தோஷ் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

கோவை பன்னிமடையில் ஏழு வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் சந்தோஷ் குற்றவாளி என போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தந்தி டிவி

கடந்த மார்ச் மாதம் பன்னிமடையில் ஏழு வயது சிறுமி கை, கால் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது தெரியவந்தது. மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரித்த காவல்துறை தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ் என்பவரை கைது செய்தது. கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சந்தோஷ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. குற்றவாளிக்கான தண்டனை விவரங்கள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என போக்சோ நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதனிடையே, சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான மரபணு பரிசோதனையில் மற்றொரு நபரின் டி.என்.ஏ இருப்பது தெரியவந்துள்ளதாகவும், அந்த நபரை கைது செய்ய வேண்டும் எனவும் சிறுமியின் தாயார் போக்சோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?