தமிழ்நாடு

பெண்ணிடம் தங்கச் சங்கிலி அறுத்த இளைஞருக்கு அடி உதை

கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில், பெண்ணிடம் செயினை அறுக்க முயன்ற இளைஞர் ஒருவரை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அடித்து உதைத்தனர்.

தந்தி டிவி

கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில், பெண்ணிடம் செயினை அறுக்க முயன்ற இளைஞர் ஒருவரை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அடித்து உதைத்தனர். 68 வயதான சுசீலா என்பவர் நடைபயிற்சி சென்றபோது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், முகவரி கேட்பது போல் நடித்து, செயினை அறுத்துள்ளார். சுதாரித்துக் கொண்ட சுசீலா, அந்த இளைஞரை பிடித்துக் கொண்டு சத்தமிட்டதால், அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, இளைஞரை மடக்கிப் பிடித்து, கட்டி வைத்து உதைத்தனர். இதையடுத்து, போலீசார் விரைந்து வந்து நகையை மீட்டு திருடனை பிடித்துச் சென்றனர். விசாரணையில், அந்த இளைஞர், திருப்பூரைச் சேர்ந்த அம்சா என தெரியவந்தது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ