தமிழ்நாடு

பெண்ணிடம் தங்கச் சங்கிலி அறுத்த இளைஞருக்கு அடி உதை

கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில், பெண்ணிடம் செயினை அறுக்க முயன்ற இளைஞர் ஒருவரை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அடித்து உதைத்தனர்.

தந்தி டிவி

கோவை அடுத்த குனியமுத்தூர் பகுதியில், பெண்ணிடம் செயினை அறுக்க முயன்ற இளைஞர் ஒருவரை, பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அடித்து உதைத்தனர். 68 வயதான சுசீலா என்பவர் நடைபயிற்சி சென்றபோது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர், முகவரி கேட்பது போல் நடித்து, செயினை அறுத்துள்ளார். சுதாரித்துக் கொண்ட சுசீலா, அந்த இளைஞரை பிடித்துக் கொண்டு சத்தமிட்டதால், அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து, இளைஞரை மடக்கிப் பிடித்து, கட்டி வைத்து உதைத்தனர். இதையடுத்து, போலீசார் விரைந்து வந்து நகையை மீட்டு திருடனை பிடித்துச் சென்றனர். விசாரணையில், அந்த இளைஞர், திருப்பூரைச் சேர்ந்த அம்சா என தெரியவந்தது.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு