தமிழ்நாடு

காரை மறித்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரம் : திருப்பதியில் தாய் - மகன் கைது

கோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தாய், மகன் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

கோவையில் நகைக்கடைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட நகைகள் கொள்ளை போன விவகாரத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த தாய், மகன் திருப்பதியில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 7ஆம் தேதி தமிழகம் - கேரள எல்லையில் காரில் கொண்டு செல்லப்பட்ட பிரபல நகைக்கடைக்கு சொந்தமான 98 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது. இந்நிலையில், திருப்பதி ரயில் நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த இருவரிடம் 60 லட்ச ரூபாய் மதிப்பிலான நகைகளை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சமா, அகமது சலீம் என்பதும், கோவை கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது. நகைகளை வீட்டில் வைக்க பயந்து திருப்பதிக்கு சென்ற நிலையில் போலீசிடம் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி