தமிழ்நாடு

மரத்தில் கார் மோதி பயங்கர விபத்து - இளைஞர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி

மரத்தின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த இந்திரஜித் தனது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து ஆனைக்கட்டி செல்வதற்காக காரில் பயணித்தார். அப்போது கணுவாய் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது திடீரென சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் உருக்குலைந்து போனது. இடிபாடுகளுக்கு மத்தியில் சிக்கிய இளைஞர்களில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு இவர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்