தமிழ்நாடு

திருக்குறள் முதல் கொன்றை வேந்தன் வரை.... நினைவாற்றலில் அசத்தும் 4 வயது சிறுவன்

தமிழ் இலக்கியங்களை தன் சுட்டு விரலில் வைத்துள்ளான் கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுவன்.

தந்தி டிவி

தமிழ் இலக்கியங்களை தன் சுட்டு விரலில் வைத்துள்ளான் கோவையை சேர்ந்த நான்கு வயது சிறுவன். கோவை ஒத்தகால்மண்டபத்தை சேர்ந்த கருணாஹரிராம் - கீதா தம்பதியின் நான்கு வயது சிறுவன் ராகுல். நாடுகளின் பெயரை சொன்னால் தலைநகரத்தை சரியாக சுட்டிக்காட்டுவது, நாடாளுமன்ற உறுப்பினகள் பெயர்கள் மற்றும் தேசியக்கொடி என சிறுவனின் நினைவாற்றல் காண்போரை மெய்சிலிர்க்க செய்கிறது. இத்தனை சிறிய வயதில் இத்தனை பெரிய நினைவாற்றல் எப்படி சாத்தியம் என கேட்டால், தமிழே முழு முதற்காரணம் என்கின்றனர் சிறுவனது பெற்றோர். மழலை குறளில் இலக்கியங்களை சிறுவன் கூறும் அழகு, அந்த தமிழுக்கே அழகு சேர்ப்பதாய் தான் உள்ளது. தமிழ் மொழி மீது சிறுவனுக்கு எப்படி இத்தனை பற்று வந்த‌து என்பதை ஆராய்ந்த‌போது, அதில் அவரது தந்தையின் பங்கு அளப்பரியது என்பது புலனான‌து. ஆங்கிலத்தில் பேசுவதே அறிவு என கருதி கொண்டிருக்கும், இந்த நவீன தமிழ் சமூகத்தில், தாய் மொழி போற்றும் கருணா - கீதா தம்பதி, விதி விலக்காய் உயர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்