தமிழ்நாடு

தடையை மீறி சேவல் சண்டை சூதாட்டம் - போலீசாரைக் கண்டதும் தப்பி ஓடிய கும்பல்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரைப் பகுதியில் 20-க்கும் மேற்பட்டோர் சேவல் சண்டையில் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தந்தி டிவி

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கீழக்கரைப் பகுதியில் 20-க்கும் மேற்பட்டோர் சேவல் சண்டையில் சூதாட்டத்தில் ஈடுபடுவதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், போலீசார் அங்கு சென்றபோது, போலீசாரைக் கண்டதும் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தங்களது சேவல்களுடன் தப்பி ஓடி உள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு நிறுத்தப்பட்டு இருந்த சூதாட்டக்காரர்களின் 13 பைக்குகளை கைப்பற்றிய போலீசார், தப்பி ஓடியவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்