புதுக்கோட்டை மாவட்டம் கூடலூர் கிராம மாணவர்கள், பள்ளி நேரங்களில் பேருந்து வசதி இல்லாதது குறித்து முதலமைச்சர் விஜய்க்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அப்பகுதியில் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் மாவட்ட ஆட்சியர் அருணா பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மாணவர்களுடன பேருந்தில் பயணம் செய்து அவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். இதனால் கூடலூர், பனையம்பட்டி, குளிப்பிறை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.