தொடர்ந்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வானம்பார்த்த பூமியான புதுக்கோட்டையை வளமிக்க பூமியாக மாற்றப்படும் என்றார். இதற்காக, காவிரி - வைகை- குண்டாறு திட்டம் நிறைவேற்றபடும் என்ற அவர், நிலம் கையகம் நடந்து வருவதாகவும், விரைவில் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கும் என்றும் கூறினார். நானே நேரடியாக வந்து, என் கையாலேயே திட்டத்தை தொடங்கி வைப்பேன் என முதலமைச்சர் திட்டவட்டமாக கூறினார். அதன்போது, அங்கிருந்த மக்கள், கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.