தமிழ்நாடு

கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ.306.42 கோடி

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306 கோடியே 42 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 306 கோடியே 42 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஒரு நாள் ஊதியமாக 110 கோடி ரூபாய் நிவாரண நிதிக்காக வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத சம்பளமான 97 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயும் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் 145 கோடியே 48 லட்சத்து 30 ஆயிரத்து 986 ரூபாய் பெறப்பட்டுள்ளது. பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கிய அனைத்து நிறுவனங்களுக்கும், பொதுமக்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்