தமிழ்நாடு

புராதன சின்னங்களை தூய்மைப்படுத்தும் பணி - தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு...

மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களில் உப்பு படிமங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் மீது கடலின் உப்புக்காற்றால், அரித்து, சிறு துளைகள் ஏற்பட்டு அசுத்தங்கள் ஏற்படுவதால், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொல்பொருள் துறை சார்பில் ரசாயண கலவை மூலம் உப்பு படிமங்கள் அகற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களில் உப்பு படிமங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. வேதியியல் பிரிவு வல்லுநர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணியில், உப்பு படிமங்களை அகற்ற காகித கூழுடன் சிலிகன் பாலிமர் ரசாயனக் கலவை கலந்து பூசப்படுகிறது. பாதிப்பை பொறுத்து, 15 நாட்களுக்கு இந்த பணி நடைபெறும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்