தமிழ்நாடு

புராதன சின்னங்களை தூய்மைப்படுத்தும் பணி - தொல்லியல் துறை சார்பில் ஏற்பாடு...

மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களில் உப்பு படிமங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
மாமல்லபுரத்தில் புராதன சின்னங்கள் மீது கடலின் உப்புக்காற்றால், அரித்து, சிறு துளைகள் ஏற்பட்டு அசுத்தங்கள் ஏற்படுவதால், 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தொல்பொருள் துறை சார்பில் ரசாயண கலவை மூலம் உப்பு படிமங்கள் அகற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மாமல்லபுரம் பாரம்பரிய சின்னங்களில் உப்பு படிமங்கள் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. வேதியியல் பிரிவு வல்லுநர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் இப்பணியில், உப்பு படிமங்களை அகற்ற காகித கூழுடன் சிலிகன் பாலிமர் ரசாயனக் கலவை கலந்து பூசப்படுகிறது. பாதிப்பை பொறுத்து, 15 நாட்களுக்கு இந்த பணி நடைபெறும் என்று தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்