தமிழ்நாடு

8ஆம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை...

சென்னையில் 8ஆம் வகுப்பு மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த அந்த மாணவி, மைலாப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். தந்தை இல்லாத நிலையில், இவரது தாய் வீட்டு வேலை செய்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்த தாய், தனது மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதை பார்த்து கதறி அழுதுள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த தேனாம்பேட்டை காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"