Public Exam | 12th பப்ளிக் எக்ஸாம் வினாத்தாள் விவகாரம் - பள்ளிக்கல்வித் துறை அதிரடி உத்தரவு #karur #publicexam2026 #12thexams வினாத்தாள் குறைந்ததை மறைத்த ஆசிரியர்கள் விடுவிப்பு - கல்வித்துறை நோட்டீஸ் கரூரில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் போது வினாத்தாள் எண்ணிக்கை குறைந்ததை மறைத்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மற்றும் துறை அலுவலர் ஆகிய இருவரைப் பணிகளில் இருந்து விடுவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. துளசிகொடும்பு தனியார் பள்ளி மையத்தில் தமிழ் பாடத் தேர்வின் போது வினாத்தாள் எண்ணிக்கை குறைவாக இருந்ததை, மேல் அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் அவர்கள் மறைத்ததாகக் கூறப்படுகிறது. வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விளக்கம் கேட்டு இருவருக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.