விநாயகர் ஊர்வலத்தில் மோதல்.. எஸ்பி வாகனத்தை லாக் செய்த இளைஞர்கள் நத்தம் அருகே விநாயகர் ஊர்வலத்தில் மோதல் - எஸ்பி வாகனம் முற்றுகை திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே விநாயகர் சிலை ஊர்வலப் பாதை தொடர்பாக இருதரப்பிடையே ஏற்பட்ட கைகலப்பில் 5 பேர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஒரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதுடன், பாதுகாப்பு பணிக்காக வந்த எஸ்பி வாகனத்தையும் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து காவல்துறையினர் தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, விநாயகர் சிலைகள் குளத்திற்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டது.
#vinayagarchaturthi #vinayagar #ganeshaprocession #fighting #dindigul #thanthitv #police