தமிழ்நாடு

கூட்டுறவு தேர்தல் போது கட்சியினரிடையே வாக்குவாதம்

கும்பகோணம் அருகே உடையாளூரில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

கும்பகோணம் அருகே உடையாளூரில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உடையாளூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தேர்தல்

நீதிமன்ற உத்தரவுபடி நடைபெற்று வந்தது. மொத்தம் ஆயிரத்து 900 உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ள இந்த வங்கியில் 11 பேரை தேர்ந்தெடுக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 33 பேர் போட்டியிட்டனர்.இந்த நிலையில் திடீரென அங்கு திரண்டு இருந்த கூட்டத்தினரிடையே வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார், உடனடியாக கூட்டத்தை கலைத்தனர்.மேலும் தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறி தேர்தல் அதிகாரிகளால் நோட்டீஸ் ஒட்டப்பட்டு, தேர்தல் நிறுத்தப்பட்டது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?