தமிழ்நாடு

கூட்டுறவு தேர்தல் போது கட்சியினரிடையே வாக்குவாதம்

கும்பகோணம் அருகே உடையாளூரில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

கும்பகோணம் அருகே உடையாளூரில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் கட்சியினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உடையாளூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் தேர்தல்

நீதிமன்ற உத்தரவுபடி நடைபெற்று வந்தது. மொத்தம் ஆயிரத்து 900 உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ள இந்த வங்கியில் 11 பேரை தேர்ந்தெடுக்க தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 33 பேர் போட்டியிட்டனர்.இந்த நிலையில் திடீரென அங்கு திரண்டு இருந்த கூட்டத்தினரிடையே வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார், உடனடியாக கூட்டத்தை கலைத்தனர்.மேலும் தேர்தல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறி தேர்தல் அதிகாரிகளால் நோட்டீஸ் ஒட்டப்பட்டு, தேர்தல் நிறுத்தப்பட்டது.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்