புழல் சிறையில் கைதிகள் மோதல் - ஒருவருக்கு பிளேடு வெட்டு சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளிடையே ஏற்பட்ட திடீர் மோதலில் ஒருவர் காயமடைந்தார். விசாரணைப் பிரிவில் அடைக்கப்பட்டிருந்த கொலை வழக்கு கைதி இம்மானுவேல் மற்றும் திருட்டு வழக்கு கைதி சந்துரு ஆகிய இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்துரு, மறைத்து வைத்திருந்த பிளேடால் இம்மானுவேலின் முகத்தில் பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த இம்மானுவேலை சிறைக்காவலர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச்சம்பவம் குறித்து புழல் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.