தமிழ்நாடு

கொடிய மது பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்த சிவில் இன்ஜினியர் திடீர் மரணம்

தந்தி டிவி

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகேயுள்ள கூடமலை கிராமத்தை சேர்ந்த சிவில் இன்ஜினியர் அறிவழகன் என்பவர் மது பழக்கத்துக்கு அடிமையாக இருந்துள்ளார். வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த அவரை உறவினர்கள் ஓமலூர் அருகே உள்ள மோலாண்டிபட்டியில் செயல்பட்டு வரும் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். இந்த நிலையில், அறிவழகனுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதால், மறுவாழ்வு மைய நிர்வாகத்தினர் அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிவழகன் மனைவி வனிதா கொடுத்த புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மறுவாழ்வு மைய நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு