குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜன் வீடு மற்றும் திமுக அலுவலகம் ஆகியவை முன் கோலங்கள் போடப்பட்டன. கோலம் மூலம் எதிர்கட்சிகள் எதிர்ப்பை பதிவு செய்து வரும் நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வீடுகளின் முன் கோலங்கள் போடப்பட்டன. இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் திமுக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ்ராஜனின் வீடு மற்றும் திமுக அலுவலகம் முன்பு எதிர்ப்பு கோலங்கள் போடப்பட்டன.