தமிழ்நாடு

சர்க்கஸ் ஒட்டகத்தை திருடி சென்ற மர்ம நபர்கள் - போலீஸ் வலைவீச்சு

தந்தி டிவி

தஞ்சாவூர் அருகே சர்க்கஸ் அமைத்திருந்தவரின் ஒட்டகத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கரூர் மாவட்டம், நத்தமேடு பகுதியை சேர்ந்த விஜய், ஊர் ஊராகச் சென்று ஒட்டகம், குதிரை மற்றும் நாய் உள்ளிட்டவற்றை வைத்து சர்க்கஸ் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தற்போது தஞ்சாவூர் கீழவஸ்தா சாவடி பகுதியில் கூடாரம் அமைத்து சர்க்கஸ் நடத்தி வந்தபோது, கடந்த 15ஆம் தேதி இரவு கூடாரத்திற்கு அருகே கட்டி வைக்கப்பட்டிருந்த ஒட்டகத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்