தமிழ்நாடு

சின்னகருப்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தேர்தல் : இன்று வாக்கு எண்ணும் பணி தொடக்கம்

கும்பகோணம் அருகே உள்ள சின்ன கருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல், தனி நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று நடைபெற்றது.

தந்தி டிவி
கும்பகோணம் அருகே உள்ள சின்ன கருப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தேர்தல், தனி நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று நடைபெற்றது. மாலை 7 மணி வரை நடந்த வாக்குப்பதிவை ஒட்டி பாதுகாப்புக்காக ஏராளமான போலீசார் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இந்த சங்கத்தில் மொத்தம் இரண்டாயிரத்து 550 உறுப்பினர்களில் உயரிழந்தவர்கள் போக ஆயிரத்து 200 பேர் வாக்களிக்க தகுதியான நிலையில், 650 பேர் வாக்களித்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த சங்கத்தில், முதன்முதலாக கூட்டுறவு சங்க தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. நேற்று நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்