சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தின் சார்பில் ஜவகர்லால் நேருவின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து அனகாபுத்தூர், பொழிச்சலூர், மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளியில் பயிலும் 48 மாணவ-மாணவிகள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். சென்னையில் இருந்து திருச்சி, மெரினா கடற்கரை, மாமல்லபுரம், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகள் விமானத்தில் அழைத்து செல்லப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டது. விமானம் 16 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து சென்றபோது மாணவ-மாணவிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாணவ-மாணவிகளுடன் விமானத்தில் நடிகர் சதீஷ் பயணம் செய்து அவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.