தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : 3 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை - சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

அயனாவரம் மாற்றுத் திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 3 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, அக்குடியிருப்பில் பணியாற்றிய ரவிகுமார், சுரேஷ், ராஜசேகர், அபிஷேக், சுகுமாரன், உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், 15 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்களுக்கான தண்டனை இன்று அறிக்கப்பட்டது.

அதன்படி 3 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறையும் விதிக்கப்பட்டுள்ளது.

மீதமுள்ள 9 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி