தமிழ்நாடு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து குழந்தை கடத்தல் : வீடியோ வெளியீடு

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 3 வயதான ஆண் குழந்தையை கடத்திய குற்றவாளியின் வீடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ராம்சிங் -நீலாவதி தம்பதியர் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்துள்ளனர். இவர்களின் 3 வயது மகன் சோம்நாத் உடனிருந்த நிலையில் இரவில் ரயில் நிலையத்தில் 3 பேரும் தூங்கியுள்ளனர். அதிகாலை கண்விழித்துப் பார்த்தபோது குழந்தையை காணாததால் பெற்றோர் அதிர்ச்சியடைந்த நிலையில் போலீசாரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் குழந்தையை கடத்திச் சென்றவர் தாம்பரம் ரயில் நிலையத்தில் குழந்தையுடன் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதோடு தீவிர விசாரணையும் நடைபெற்று வருகிறது. ஆனால் இதுவரை குழந்தை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. மேலும் அந்த பகுதியில் உள்ள பேருந்து நிலையங்களிலும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 4 வருடங்களுக்கு முன் இதேபோல் சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து பர்தா அணிந்த பெண் ஒருவர் குழந்தையை கடத்திச் சென்றார். இதுவரை இந்த வழக்கிலும் எந்த வித முன்னேற்றமும் இல்லாத நிலையில் மீண்டும் ஒரு சம்பவம் நடந்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது...

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு