தமிழ்நாடு

சிறுமியின் உயிரை பறித்த ஊஞ்சல்

வீட்டில் ஊஞ்சல் கட்டி ஆடிய போது, கயிறு கழுத்தில் இறுக்கி, பள்ளி மாணவி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள குளத்துக்காட்டை சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகள் பிரியதர்ஷினி. 5ஆம் வகுப்பு படித்து வந்த இவர் , கயிற்றில் ஊஞ்சல் கட்டி விளையாடி கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கயிறு பிரியதர்ஷினியின் கழுத்தை இறுக்கியதால், மூச்சு திணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதை பார்த்த அவரது பெற்றோர், பிரியதர்ஷினியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே மாணவி உயிரிழந்தார். ஊஞ்சல் கட்டி விளையாடிய மகளின் உயிர் போனதை அறிந்து பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"