தமிழ்நாடு

கிணற்றுக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுவன் பலி - சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்த போது விபரீதம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நான்கு வயது கனிஷ் மற்றும் 11 வயது சிறுவன் சுமந்த் விளையாடி கொண்டிருந்த போது, சிறுவன் கனிஷ், 70 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நான்கு வயது கனிஷ் மற்றும் 11 வயது சிறுவன் சுமந்த் விளையாடி கொண்டிருந்த போது, சிறுவன் கனிஷ், 70 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இதனை கண்ட சிறுவன் சுமந்த், கிணற்றுக்குள் குதித்து சிறுவனை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் கனிஷ் தண்ணீருக்குள் மூழ்கியதால் சுமந்த் கத்தி கூச்சலிட்டு உள்ளார். உடனே அக்கம் பக்கத்திலிருந்து வந்த உறவினர்கள், சுமந்தை மீட்டு, கனிஷை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் கிணற்றில் 40 அடி வரைக்கும் தண்ணீர் இருந்ததால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், 3 மணி நேரத்திற்கு பிறகு கிணற்றில் இருந்து சிறுவன் கனிஷின் உடலை சடலமாக மீட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்