தமிழ்நாடு

கிணற்றுக்குள் தவறி விழுந்த 4 வயது சிறுவன் பலி - சிறுவர்கள் விளையாடி கொண்டிருந்த போது விபரீதம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நான்கு வயது கனிஷ் மற்றும் 11 வயது சிறுவன் சுமந்த் விளையாடி கொண்டிருந்த போது, சிறுவன் கனிஷ், 70 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார்.

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நான்கு வயது கனிஷ் மற்றும் 11 வயது சிறுவன் சுமந்த் விளையாடி கொண்டிருந்த போது, சிறுவன் கனிஷ், 70 அடி ஆழம் கொண்ட கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இதனை கண்ட சிறுவன் சுமந்த், கிணற்றுக்குள் குதித்து சிறுவனை காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் கனிஷ் தண்ணீருக்குள் மூழ்கியதால் சுமந்த் கத்தி கூச்சலிட்டு உள்ளார். உடனே அக்கம் பக்கத்திலிருந்து வந்த உறவினர்கள், சுமந்தை மீட்டு, கனிஷை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் கிணற்றில் 40 அடி வரைக்கும் தண்ணீர் இருந்ததால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், 3 மணி நேரத்திற்கு பிறகு கிணற்றில் இருந்து சிறுவன் கனிஷின் உடலை சடலமாக மீட்டனர்.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’