நாட்டிலேயே தொழில் துறையில் முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். சென்னை தரமணியில் நடந்த டி.எல்.எப் அடிக்கல் நாட்டு விழாவை குத்துவிளக்கேற்றி முதலமைச்சர் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர், முதலீடுகள் செய்வதில் எளிதாகும் பிரிவு, தனது அலுவலகத்தில் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறினார்.