தமிழ்நாடு

"தமிழக அரசுக்கு விருது மழை பொழிந்து வருகிறது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம்

பல்வேறு சாதனைகளுக்காக தமிழக அரசுக்கு, விருது மழை பொழிந்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஆளுநர் உரை மீதான பதிலுரையில் பேசிய முதலமைச்சர், அரசுமுறை பயணமாக வெளிநாட்டு பயணம் மேற்கொண்டதன் மூலம், லண்டனில் உள்ள புகழ்வாய்ந்த கிங்ஸ் மருத்துவமனையின் கிளை, தமிழகத்தில் விரைவில் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு, 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், 63 புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார். அதன் மூலம் 83 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதாக கூறினார். அரசின் கொள்கைகள், திட்டங்களுக்காக, விருது மழை பொழிந்து வருவதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். 5 லட்சம் முதியோர்களுக்கு ஓய்வூதியம் வழங்க திட்டமிடப்பட்டு, தற்போது ஒன்றரை லட்சம் பேருக்கு வழங்கப்படுவதாக கூறினார். விரைவில் 3 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்தார்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு