தமிழ்நாடு

பிச்சாவரத்தில் விடப்படும் இறால் பண்ணை கழிவுநீர் : அலையாத்தி காடுகளை காப்பாற்ற கோரிக்கை

இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் பிச்சாவரத்தில் உள்ள அலையாத்தி காடுகள் அழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

சிதம்பரம் அருகேயுள்ள பிச்சாவரத்தில் 4 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், அலையாத்தி காடுகள் பரந்து விரிந்துள்ளது. இந்த நிலையில், சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் இறால் பண்ணை கழிவுநீர் பிச்சாவரம் பகுதியில் விடப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அலையாத்தி காடுகளில் உள்ள மரங்கள் பட்டுப்போக துவங்கியுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். மேலும் அங்கு இயக்கப்படும் படகுகளில் இருந்து வெளியேற்றப்படும் புகையால் அரிதான சதுப்பு நில தாவரங்களை அழியத்துவங்கியுள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்