செய்யூரில், 4 ஆயிரம் மெகாவாட் திறனில், பிரமாண்ட அனல் மின் நிலையம் அமைக்க, மத்திய அரசுடன் பேசி துரித நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். திமுக உறுப்பினர் ரங்கநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், மின் துறை சார்ந்த திட்டங்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதி எதுவும் திருப்பி அனுப்பப்படவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.