தமிழ்நாடு

"உயிரையே விட்டாலும் விடுவோம் ஆனா.." - உணர்ச்சி பொங்க பேசிய மக்கள்

தந்தி டிவி

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் மீண்டும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

பரந்தூரில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக, ஏகனாபுரம் கிராமத்தில் 752-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம பொதுமக்கள் 7 முறை கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுக்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில், தொடர்ந்து 6 முறை கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி நடந்த கிராம சபை கூட்டத்தில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 8 ஆவது முறை தீர்மானம் நிறைவேற்றினர். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் எதுவும் நடக்காதது குறித்து அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். பதற்றம் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா