தமிழ்நாடு

"உயிரையே விட்டாலும் விடுவோம் ஆனா.." - உணர்ச்சி பொங்க பேசிய மக்கள்

தந்தி டிவி

பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் மீண்டும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர்.

பரந்தூரில் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக, ஏகனாபுரம் கிராமத்தில் 752-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம பொதுமக்கள் 7 முறை கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுக்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காத சூழலில், தொடர்ந்து 6 முறை கிராம சபை கூட்டத்தை புறக்கணித்தனர். இந்த நிலையில் சுதந்திர தினத்தையொட்டி நடந்த கிராம சபை கூட்டத்தில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 8 ஆவது முறை தீர்மானம் நிறைவேற்றினர். அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் எதுவும் நடக்காதது குறித்து அதிகாரிகளிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பினர். பதற்றம் காரணமாக அங்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை