தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் - போஸ்கோ சட்டத்தின் கீழ் மீனவர் கைது

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த மீனவரை போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

தந்தி டிவி
சென்னை காசிமேட்டில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த மீனவரை போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது சிறையில் அடைத்தனர். காசிமேட்டை சேர்ந்த, செந்தில் என்பவரது மகள் திருவிழாவுக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, மாணவியை கண்டு பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திலோத் என்ற மீனவர் தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி தெரிவித்ததையடுத்து, அந்த மீனவரை, போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"