தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக புகார் - போஸ்கோ சட்டத்தின் கீழ் மீனவர் கைது

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த மீனவரை போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது சிறையில் அடைத்தனர்.

தந்தி டிவி
சென்னை காசிமேட்டில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த மீனவரை போஸ்கோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது சிறையில் அடைத்தனர். காசிமேட்டை சேர்ந்த, செந்தில் என்பவரது மகள் திருவிழாவுக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை. இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் காசிமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, மாணவியை கண்டு பிடித்த போலீசார் விசாரணை நடத்தினர். அதில், திலோத் என்ற மீனவர் தம்மை பாலியல் பலாத்காரம் செய்ததாக மாணவி தெரிவித்ததையடுத்து, அந்த மீனவரை, போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக