தமிழ்நாடு

கடைமடைக்கு விரைவாக நீர் செல்ல நடவடிக்கை - பொதுப்பணித்துறை விளக்கம்

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர், கடை மடை பகுதிகளுக்கு விரைவாக சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பொதுப்பணித்துறை கூறியுள்ளது.

தந்தி டிவி

* மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர், கடை மடை பகுதிகளுக்கு விரைவாக சென்றடைய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பொதுப்பணித்துறை கூறியுள்ளது.

* கல்லணைக்கு தண்ணீர் சென்றடைந்த பின்னர், காவிரி 24 பிரிவுகளாகவும், வெண்ணாறு 17 பிரிவுகளாகவும், கல்லணை கால்வாய் 27 வாய்க்கால்களாக பிரிந்தும் கடை மடைக்கு தண்ணீர் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

* இவற்றில் நேரடியாக தண்ணீர் வழங்கப்படும் 8 ஆறுகளிலும், பாசனம் மற்றும் வடிகால் மூலம் தண்ணீர் வழங்கப்படும் 28 ஆறுகளிலும் தண்ணீர் விரைவாக கடைமடை பகுதிகளுக்கும், பாசனத்திற்கும் சென்றடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

* குறிப்பாக உய்யகொண்டான் கால்வாய், கல்லணைக்கால்வாய், மற்றும் வாடவார் நீட்டிப்பு கால்வாய் ஆகியவை வடிவமைக்கப்பட்ட கால்வாய்களாக இருப்பதால் பாசனத்திற்கு தண்ணீர் சென்றடைய அதிக நாட்கள் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

* இருப்பினும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் விரைவாகசென்றடைவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை