தமிழ்நாடு

சென்னையின் நீராதாரமாக மாறிய சிக்கராயபுரம் கல்குவாரி - தண்ணீர் எடுக்க குழாய் அமைக்கும் பணி தீவிரம்

கோடைகாலத்தில் சென்னையின் தாகம் தீர்க்கும் சிக்கராயபுரம் கல்குவாரியில் தண்ணீர் எடுக்க ஏதுவாக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

தந்தி டிவி
மழை குறைந்ததால், சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும், சோழவரம், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகளில் தண்ணீர் வற்றத் தொடங்கிவிட்டன. ஆங்காங்கே மண்மேடு தெரியும் அளவுக்கு ஏரிகளின் நிலை கவலைக்கிடமாகியுள்ளன. கோடையில் இந்த நிலைமை அதிகரிக்கும் என்பதால், 2017-ம் ஆண்டைப் போல், தற்போதும் மாங்காடு அடுத்த சிக்கராயபுரம் கல்குவாரி குட்டைகளில் தண்ணீர் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. பொக்லைன் மூலம் சரிவு ஏற்படுத்தி, உடைந்த குழாய்களை சீரமைப்பது உள்ளிட்ட பணிகள் விறுவிறுப்பாகியுள்ளன.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு