தமிழ்நாடு

1000 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல், 4 பேர் கைது

ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் ஆயிரம் கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் ஆயிரம் கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியில் தேன்ராஜ் என்பவர் தனது வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 350 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் அம்பத்தூர் ராமாபுரம் பெரியார் தெருவில் உள்ள ஒரு குடோனில் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தேன்ராஜ், அப்பாஸ், சூரியபிரகாசம், கோபால் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ