தமிழ்நாடு

1000 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல், 4 பேர் கைது

ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் ஆயிரம் கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தந்தி டிவி
ஆவடி மற்றும் அம்பத்தூர் பகுதிகளில் ஆயிரம் கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். ஆவடியை அடுத்த அயப்பாக்கம் பகுதியில் தேன்ராஜ் என்பவர் தனது வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த 350 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதேபோல் அம்பத்தூர் ராமாபுரம் பெரியார் தெருவில் உள்ள ஒரு குடோனில் மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த 650 கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தேன்ராஜ், அப்பாஸ், சூரியபிரகாசம், கோபால் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக