"புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால்?" - அப்பல்லோ சிகிச்சை மையம் கொடுத்த விழிப்புணர்வு அப்பல்லோ சிகிச்சை மையம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னையில் அப்பல்லோ புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்தியாவில் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. 15 லட்சத்திற்கும் அதிகமான புற்றுநோய் பாதிப்புகள் ஆண்டொன்றுக்கு கண்டறியப்படுகிறது. 9 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. எந்த வகை புற்றுநோயாக இருந்தாலும் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்த முடியும். இதனை வலியுறுத்தும் வகையில், அப்பல்லோ புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் கருத்தரங்கு நடத்தப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.