தமிழ்நாடு

அக்காவை பார்க்கவிடாமல் தடுத்ததால் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இளைஞர்

சென்னை அய்யப்பன் தாங்கலில் காவலாளியை மிரட்ட வானத்தை நோக்கி சுட்ட இளைஞரின் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி

கேரள மாநிலத்தை சேர்ந்த தீபக் என்பவர், தனது அக்காவை பார்க்க ஐயப்பன் தாங்கலில் உள்ள பங்களா குடியிருப்புக்கு வந்துள்ளார். அப்போது அங்கிருந்த காவலாளி தீபக்கை உள்ளே அனுமதிக்காததால், ஆத்திரமடைந்த தீபக் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டு விட்டு தப்பிச் சென்று விட்டார். இதனையடுத்து கேரளா சென்ற மாங்காடு போலீசார் அவர் மனநோய் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்ததையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவத்தன்று அவருடன் வந்த நண்பர் வினில்குமாரை கைது செய்து, சென்னை அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை