தமிழ்நாடு

ஐ-போன் எனக் கூறி ஊர்வசி சோப்பை தந்த இளைஞர்கள் - 15 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஏமாந்த வங்கி மேலாளர்

சென்னையில், ஐபோன் என்று கூறி ஊர்வசி சோப்பை கொடுத்து வங்கி மேலாளரை ஏமாற்றிய இரண்டு மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னை மயிலாப்பூரில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைக்குள் நுழைந்த இரண்டு இளைஞர்கள், அங்கு மேலாளராக பணிபுரிந்து வரும் ரமேஷின் அறைக்குச் சென்று தங்களிடம் புதிய மாடல் ஐபோன் உள்ளதாகவும் அதன் விலை வெறும் 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே எனவும் கூறியுள்ளனர். இதையடுத்து, அவர்களிடம் 15 ஆயிரம் ரூபாயை கொடுத்து, அந்த ஐபோன் பெட்டியை ரமேஷ் வாங்கினார். 5 நிமிடம் கழித்து, அந்தப் பெட்டியை திறந்து பார்த்த ரமேஷ், அதனுள் ஐபோனுக்கு பதிலாக ஊர்வசி சோப்பு இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, ரமேஷ் அளித்த புகாரின் பேரில், சிசிடிவியில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், மோசடி இளைஞர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ