தமிழ்நாடு

"சென்னைக்கு குடிநீர் பிரச்சினை வராது" - குடிநீர் வடிகால் வாரியம்

சென்னையில் கோடையை சமாளிக்கும் அளவுக்கு ஏரிகளில் நீர் இருப்பு உள்ளதாக, குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடங்கும் நிலையில், அடுத்து வரவிருக்கும் கோடை காலத்தில், நீரின் தேவை பூர்த்தியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் கோடையை சமாளிக்க முடியுமா? என்பதே பலரது சந்தேகமாக உள்ளது. இதுதொடர்பாக சென்னை குடிநீர் வடிகால் வாரியம் விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. அதில், சென்னைக்கு குடிநீர் வழங்கக் கூடிய பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பராம்பாக்கம் ஏரிகளில் போதிய நீர் இருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் நான்கு ஏரிகளிலும் ஆயிரத்து 417 மில்லியன் கன அடி நீர் மட்டுமே இருந்த நிலையில், இந்த ஆண்டு தற்போது 5 ஆயிரத்து131 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளதாக, சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. இதனால், பருவமழை தாமதமாக தொடங்கினாலும், சென்னையில் கோடையை சமாளிக்க முடியும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி