தமிழ்நாடு

நிலை தடுமாறி ஓடிய பேருந்து - கட்டுப்படுத்திய கார் ஓட்டுநர்

சென்னை வேளச்சேரி நூறு அடி சாலையில் அரசு பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுனருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி
சிறுச்சேரியில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்த மாநகர பேருந்தில் ஓட்டுனர் ராஜேஷ் கண்ணா நெஞ்சுவலியால் ஸ்டேரிங்கில் மயங்கி விழுந்துள்ளார். சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த கார்கள் மீது பேருந்து மோதிக் கொண்டே சென்றுள்ளது. இதனை பார்த்த கார் ஓட்டுனர் விஜய், பேருந்தில் ஏறி பேருந்தை சாலையோரம் நிறுத்தினார். இதனால் பேருந்தில் பயணித்த 15 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். ஓட்டுநர் ராஜேஷ்கண்ணாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். உயிரிழந்த ஓட்டுநர் ராஜே​ஷ் கண்ணாவுக்கு 36 வயதே ஆகிறது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி