தமிழ்நாடு

இளம்பெண் இறப்பில் சந்தேகம் - சகோதரர் புகார்

தந்தி டிவி

                                     இளம்பெண் இறப்பில் சந்தேகம் - சகோதரர் புகார்

• வண்ணாரப்பேட்டையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தனது தங்கையின் இறப்பில் சந்தேகமிருப்பதாக அவரது சகோதரர் புகாரளித்துள்ளார். • சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஶ்ரீரங்கமாள் தெருவில் வசித்து வரும் பிரகாஷ், 8 ஆண்டுகளாக கவிதா என்ற பெண்ணை காதலித்து, கடந்த 2022-ல் திருமணம் செய்து கொண்டார். • கடந்த 16-ம் தேதி, தனது தாயை செல்போனில் தொடர்புகொண்ட கவிதா, தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். • தொடர்ந்து தூக்கிட்டு கவிதா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், தனது தங்கை இறப்பில் சந்தேகமிருப்பதாக அவரது சகோதரர் போலீசில் புகாரளித்துள்ளார். • மேலும், கவிதாவின் கணவர் பிரகாஷுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனை தட்டிக்கேட்ட தனது தங்கையை அவர் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். • இதனையடுத்து, தண்டையார்பேட்டை ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்