தமிழ்நாடு

இளம்பெண் இறப்பில் சந்தேகம் - சகோதரர் புகார்

தந்தி டிவி

                                     இளம்பெண் இறப்பில் சந்தேகம் - சகோதரர் புகார்

• வண்ணாரப்பேட்டையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில், தனது தங்கையின் இறப்பில் சந்தேகமிருப்பதாக அவரது சகோதரர் புகாரளித்துள்ளார். • சென்னை பழைய வண்ணாரப்பேட்டை ஶ்ரீரங்கமாள் தெருவில் வசித்து வரும் பிரகாஷ், 8 ஆண்டுகளாக கவிதா என்ற பெண்ணை காதலித்து, கடந்த 2022-ல் திருமணம் செய்து கொண்டார். • கடந்த 16-ம் தேதி, தனது தாயை செல்போனில் தொடர்புகொண்ட கவிதா, தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். • தொடர்ந்து தூக்கிட்டு கவிதா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், தனது தங்கை இறப்பில் சந்தேகமிருப்பதாக அவரது சகோதரர் போலீசில் புகாரளித்துள்ளார். • மேலும், கவிதாவின் கணவர் பிரகாஷுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனை தட்டிக்கேட்ட தனது தங்கையை அவர் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். • இதனையடுத்து, தண்டையார்பேட்டை ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்