தமிழ்நாடு

இடிந்து விழும் நிலையில் ரயில்வே மேம்பாலம் சுரங்கப்பாதை : கம்பிகள் அந்தரத்தில் தொங்கியபடி காட்சியளிக்கும் அவலம்

சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதி அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது.

தந்தி டிவி
சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதி அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த பாலம் பழுதடைந்து கம்பிகள் அந்தரத்தில் தொங்குவதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு மழையின் காரணமாக பாலத்தில் இருந்து கம்பிகள் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்தப் பகுதியை கடந்து செல்லும் பயணிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையும், இதேபோல, பழுதடைந்து கம்பிகள் கீழே விழுந்து ஆபத்தான நிலையில் உள்ளது. உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பாக இதை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை