தமிழ்நாடு

சென்னை : பாதசாரிகள் மீது இருசக்கர வாகனத்தை மோதி விபத்து

சென்னை கோடம்பாக்கத்தில் பாதசாரிகள் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சிறுமி உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர்.

தந்தி டிவி
சென்னை கோடம்பாக்கத்தில் பாதசாரிகள் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் சிறுமி உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் மதுபோதையில், இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டிவந்த மர்ம நபர் ஒருவர், சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் 12 வயது சிறுமி மற்றும் ஒரு பெண் உட்பட 3 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளார். அதனை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை